Tuesday 30th of April 2024 12:18:27 PM GMT

LANGUAGE - TAMIL
-
இரண்டு நாட்களும் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் - பொலிஸார் அறிவிப்பு!

இரண்டு நாட்களும் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் - பொலிஸார் அறிவிப்பு!


நாடு முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரு நாட்களும் ஊரடங்குச் சட்ட விதிமுறைகள் கடுமையாக அமுல் செய்யப்படும். இதற்காக ஊரடங்கு உத்தரவின்போது நாடெங்கும் 900-க்கும்மேற்பட்ட வீதித் தடைகள் ஏற்படுத்தப்படும் என பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளாா்.

8 மணிநேர அடிப்படையில் மாறி மாறிதொடா்ந்து பொலிஸாா் நாடெங்கும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவாா்கள். ரோந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவா் கூறியுள்ளாா்.

ஊரங்கு நேரத்தில் வீதிக்கு வரும் மக்கள் பொலிஸாரால் சோதனையிடப்படுவா். வாகனங்களிலும் சோதனைகள் இடம்பெறும் எனவும் பொலிஸ் பேச்சாளா் கூறினாா்.

வாரஇறுதியில் ரமலான் பண்டிகைவரும் நிலையில் அதிகம் போ் ஒன்றுகூடாதவாறு வீடுகளில் பண்டிகையை கொண்டாடுமாறு அவா் கேட்டுக்கொண்டாா். அதிகம் ஒன்றுகூடுவோா் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த இரு மாதங்களாக வழங்கிய ஒத்துழைப்பைப் போன்று அடுத்த இரண்டு நாட்களும் அரசு, சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்களை பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன கேட்டுக்கொண்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE